கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி : தென்சென்னையில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி : தென்சென்னையில் குடிநீர் விநியோகம்  2 நாட்கள் நிறுத்தம்
x
தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளது.  இங்கு சுத்திகரிக்கப்படும்  கடல் நீர், தினசரி தென் சென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நாளையும் நாளைமறுநாளும் பராமரிப்பு பணி காரணமாக சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட உள்ளன. இதனால்  திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான  குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் நெம்மேலி குடிநீர் ஆலை அறிவுறுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்