15 வயது சிறுமியை ஒரு வாரமாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்...

நாகையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது சிறுமியை ஒரு வாரமாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்...
x
நாகை காடம்பாடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி மாயமானதை தொடர்ந்து, பெற்றோர் வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் திடீரென பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிறுமி, தன்னை வேளாங்கண்ணியில் சிலர் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து, வேளாங்கண்ணி விரைந்த சிறுமியின் பெற்றோர் சிறிமியை மீட்டு, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் நடத்திய மருத்துவ பரிசோதனையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நிரூபணமானது. இதை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தன்னை ஒரு வார‌மாக வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றில் அடைத்து வைத்து, 5 நபர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த‌தாக சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில், நாகையை சேர்ந்த விஜய் , அரவிந்த் உள்ளிட்ட மூன்று பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்