"நேர்மையான முறையில் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும்" - ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
நேர்மையான முறையில் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் - ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்
x
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் மக்கள் பாதை இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் 100க்கு 100 சதவீதம் வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்றார். யாரிடத்திலும் எந்த இயக்கத்திலும் எந்த அரசியலமைப்பு இடமும் பணம், பரிசு, பெற்றுக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.  

Next Story

மேலும் செய்திகள்