காதல் மனைவிக்கு ஐம்பொன் சிலை வைத்த முதியவர்...

புதுக்கோட்டையில் காதல் மனைவிக்கு ஐம்பொன் சிலை வைத்து மணி மண்டபம் அமைத்த முதியவர், காதலர்களுக்கு முன் உதாரணமாய் வாழ்ந்து வருகிறார்.
x
புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா என்பவர் கடந்த 1958 ஆம் ஆண்டு சென்பகவல்லி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். 48 ஆண்டு காலமாக இருவரும் பேரன்புடன் வாழ்ந்து வந்த‌ நிலையில், திடீரென கடந்த 2006 ஆம் ஆண்டு செண்பகவல்லி உயிரிழந்துள்ளார். இதனால் கடும் மன உலைச்சலுக்கு ஆளான சுப்பையா, மனைவிக்கு சிலை வைப்பதன் மூலம் அவர் தன்னுடன் வாழ்வார் என நம்பியுள்ளார். அதன்படி, சிலை வைத்து தினந்தோறும் வழிபட்டுவரும் சுப்பையா,  இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்