பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை
x
* தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்லியல் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய,  மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் காமாரஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

* இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்ன ஆனது? என்றும், இதுவரை அது குறித்த அறிக்கையை ஏன் சமர்ப்பிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினர்.

* தமிழர் நாகரீகம், பண்பாடு இவற்றை அறிவது முக்கியம் என கூறிய நீதிபதிகள், இதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை என கூறினர். 

* கீழடி அகழ்வாராய்ச்சியில் பல்வேறு சர்ச்சை எழுந்த நிலையில் இது போன்ற நிகழ்வுகளால் மத்திய  தொல்லியல் துறை மீது குற்றம் சாட்டப்படுகிறது எனவும், இதை தவிர்க்க குறிப்பிட்ட காலத்திற்குள் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

* கீழடி அகழ்வாராய்ச்சியில் பல்வேறு சர்ச்சை எழுந்த நிலையில் இது போன்ற நிகழ்வுகளால் மத்திய  தொல்லியல் துறை மீது குற்றம் சாட்டப்படுகிறது எனவும், இதை தவிர்க்க குறிப்பிட்ட காலத்திற்குள் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

* ஏரல் சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்தும் கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் தவறினால் சம்பந்தப்பட்ட தொல்லியல் அதிகாரிகளுக்கு சம்மன் பிறப்பிக்கப்படும் எனவும் கூறி வழக்கை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்