40 லட்ச ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்...

ஈரோடு அருகே பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
40 லட்ச ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்...
x
ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். கார் ஒட்டுநரான இவரிடம் பவானியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனக்கு தெரிந்தவர்களிடம் 50 ஆயிரம் கொடுத்தால் 1 லட்ச ரூபாய் தருவார்கள் என்று கூறியுள்ளார். இதை நம்பிய பிரபாகர்,  ஈரோடு வ.உ.சி பூங்காவில் வைத்து அந்த கும்பலிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து 1 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். வீட்டுக்கு வந்து பிரித்து பார்த்தபோது, முதலில் 500 ரூபாய் பணமும், அதனை தொடர்ந்து வெற்று தாள்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே  ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் கர்நாடகாவைச் சேர்ந்த யசோதா , தருமபுரியைச் சேர்ந்த நாகராஜ் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 40 லட்ச ரூபாய் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்