பிரதமர், முதல்வர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் கட்டாயமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

பிரதமர், முதல்வர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் கட்டாயமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
x
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில் தேசிய கீதம் பாடப்படாததை அடுத்து தலைமைச் செயலாளர்,  சுகாதார செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வேம்பு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய கீத  விதிகளின் படி, பிரதமர், முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி மனுவை  நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்