கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி துவக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2 வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி துவக்கம்
x
கூடங்குளம் அணுமின் நிலைய 2ஆவது உலையில் 750 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 750 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டது. இந்நிலையில் விஞ்ஞானிகள் பழுதை சரி செய்து இன்று அதிகாலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 480 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை இன்னும் ஓரிரு நாட்களில் அடையும் என அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே முதலாவது அணுஉலை கடந்த ஆகஸ்ட் 18ம்தேதி முதல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்