நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் - தலைமை அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
x
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர்  குவிந்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு கடந்த 6 நாட்களாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு பூர்த்தி
செய்து அளிக்க இன்று இறுதி நாள் என்பதால் ஏராளமான அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட  பலரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை சுமார் ஆயிரத்து 200 பேர் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது 
குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்