பயிர்களை யானைகள் அழித்து வருவதாக வனத்துறையினரிடம் பெண் விவசாயி கண்ணீர்...

உடுமலை அருகே பயிர்களை அழித்து வருவதால் சின்னத்தம்பி மற்றும் கும்கி யானைகளை உடனே அகற்ற வேண்டும் என பெண் விவசாயி ஒருவர் வனத்துறையிடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
பயிர்களை யானைகள் அழித்து வருவதாக வனத்துறையினரிடம் பெண் விவசாயி கண்ணீர்...
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கண்ணாடிப்புத்தூர் கரும்பு காட்டுப்பகுதியில் சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது. விவசாய நிலங்களுக்குள் சுற்றி வரும் காட்டு யானை அங்குள்ள பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் சின்னத்தம்பியை விரட்ட வந்த கும்கி யானைகளாலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக பெண் விவசாயி ஒருவர் வனத்துறையிடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்