நடந்து சென்றவர்கள் மீது மோதிய பஸ்...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

திருச்செங்கோட்டில் பின்புறத்தில் லாரி மோதி கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
x
திருச்செங்கோட்டில் பின்புறத்தில் லாரி மோதி கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி ஒருவர் உடல்நசுங்கி பலியானார். மேலும் முதியவர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் இறந்தார். இந்த நிலையில், இந்த விபத்து, அங்குள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்