ஆண்கள், பெண்களுக்கான சிலம்பப் போட்டி : 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்ப போட்டிகள் நேற்று தொடங்கியது.
ஆண்கள், பெண்களுக்கான சிலம்பப் போட்டி : 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்ப போட்டிகள் நேற்று தொடங்கியது. மூன்று நாள் நடைபெறும் இப்போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். நெடு கம்பு வீச்சு, நடு கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, வாள் வீச்சு என 14 விதமான தனித்தேர்வு போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு போட்டியாளர்கள் ஏப்ரல் மாதம் நாகர்கோவிலில் நடைபெறும் நான்காவது ஆசிய சிலம்பம் போட்டிகளிலும், மலேசியாவில் நடைபெறும் நான்காவது உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்