ஒரே நாளில் 2 யானைகள் உயிரிழப்பு...

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் நேற்று ஒரே நாளில் இரண்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 2 யானைகள் உயிரிழப்பு...
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் நேற்று ஒரே நாளில் இரண்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலையில், அங்குள்ள காண்டூர் கால்வாயில் சுமார் 7 வயதான யானை ஒன்று அடித்து வரப்பட்டது. யானையின் உடலை, கயிறு கட்டி, வனத்துறையினர் மீட்டனர். இந்த நிலையில், நேற்று இரவில், 10 வயதான மற்றொரு யானையும் தண்ணீரில் அடித்து வரப்பட்டது. அதன் உடலையும் வனத்துறையினர் மீட்டுள்ளனர். தண்ணீர் குடிக்க காண்டூர் கால்வாயில் இறங்கிய போது, இந்த யானைகள் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்