விளம்பர பேனர்கள் : காவல் ஆய்வாளர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்...

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் விளம்பர பதாகைகளை வைப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
விளம்பர பேனர்கள் : காவல் ஆய்வாளர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்...
x
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் விளம்பர பதாகைகளை வைப்பது தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. மாமல்லபுரம் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பதாகைகள் வைக்கும் போது, பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  காவல் துறையின் முன் அனுமதி பெற்ற பிறகே விளம்பர பேனர்கள் வைக்க வேண்டும் என்றும்,  நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அப்புறப்படுத்தப்படாத விளம்பர பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்