நிலக்கரி இறங்கு தள பணிகளை நிறுத்துங்கள் : கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடன்குடியில் அனல்மின் திட்டம் செயல்படுத்த ஏதுவாக, கல்லாமொழியில் நிலக்கரி இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், குலசை, மணப்பாடு, கல்லாமொழி பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று, மீனவர்கள் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், நிலக்கரி இறங்குதள பணிகளை உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் பரபப்பு நிலவி வருகிறது.
Next Story