மெக்ஸிகோ பயணியிடம் திருடப்பட்ட கைப்பை மீட்பு : ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரத்தில் மெக்ஸிகோ பயணியிடம் திருடப்பட்ட கைப்பையை ஜி.பி.எஸ் கருவி உதவியுடன் போலீசார் கண்டுபிடித்தனர்.
மெக்ஸிகோ பயணியிடம் திருடப்பட்ட கைப்பை மீட்பு : ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் கண்டுபிடிப்பு
x
காஞ்சிபுரத்தில் மெக்ஸிகோ பயணியிடம் திருடப்பட்ட கைப்பையை ஜி.பி.எஸ் கருவி உதவியுடன் போலீசார் கண்டுபிடித்தனர். மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த பவுல்அரிணா உட்பட 30 சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரம் வந்துள்ளனர்.  காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பவுல் அரிணா தியானத்தில் ஈடுபட்ட போது  கைப்பை காணாமல் போனதாக கூறப்படுகிறது.  அதில் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததால் பவுல் அரிணா, சிவகாஞ்சி போலீசில் புகார் தெரிவித்தார்.  இந்நிலையில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி உதவியுடன் 7 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சாலையோரத்தில் கிடந்த பவுல்அரிணாவின் பையை போலீசார் மீட்டு கொடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்