தனியார் ஆலையில் இளம்பெண் தற்கொலை...

வேடசந்தூர் அருகே தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனியார் ஆலையில் இளம்பெண் தற்கொலை...
x
வேடசந்தூர் அருகே தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரிசா மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் - சோனிபாய் தம்பதியர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் பஞ்சு ஆலையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சோனிபாய் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது அனில்குமாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தனியார் ஆலைகளில் வேலை செய்து வந்த சுமார் 10 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், இதுகுறித்து தீவிர விசாரனையை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்