5ஆம், 8ஆம் வகுப்புகளுக்குக்கு பொதுத் தேர்வு : தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
5ஆம், 8ஆம் வகுப்புகளுக்குக்கு பொதுத் தேர்வு : தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
x
இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டச் சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அதில் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை நடத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்த பொதுத் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அதே வகுப்பில் படிப்பார்களா இல்லை, அடுத்த வகுப்புக்கு செல்வார்களா என்பது குறித்து தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்