25 சவரன் நகைகள், ரூ 4.50 லட்சம் பணம் கொள்ளை : தொழிலதிபர் வீட்டில் ம‌ர்ம நபர்கள் கைவரிசை

வேலூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தொழிலதிபர் வீட்டில் அரங்கேறியுள்ள கொள்ளைச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 சவரன் நகைகள், ரூ 4.50 லட்சம் பணம் கொள்ளை : தொழிலதிபர் வீட்டில் ம‌ர்ம நபர்கள் கைவரிசை
x
வேலூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தொழிலதிபர் வீட்டில் அரங்கேறியுள்ள கொள்ளைச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் தென்னைமரத்தெரு பகுதியை சேர்ந்த பன்னீர் என்பவர், ஊது பத்தி மொத்த விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் ,  திருமண நிகழ்ச்சிக்கு சென்றதை அறிந்த ம‌ர்ம நபர்கள் , வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள், நான்கரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். நகை பணத்தின் மொத்த மதிப்பு 11 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்