நாயை குழந்தை போல வளர்க்கும் வயதான தம்பதி

புதுக்கோட்டையில் ஒரு வயதான தம்பதி, நாய் ஒன்றை குழந்தையாக பாவித்து வளர்த்து வருகின்றனர்.
x
புதுக்கோட்டையில் ஒரு வயதான தம்பதி, நாய் ஒன்றை குழந்தையாக பாவித்து வளர்த்து வருகின்றனர். கீழராஜ வீதியில் வசித்து வரும் கிருஷ்ண‌ன் மற்றும் சாந்தி தம்பதியின் மகன் ராஜேஷ்கண்ணா மைசூரில் பணியாற்றி வருகிறார். வயதான தம்பதிகள், தனியாக வசிப்பதால், நாய்க்குட்டி ஒன்றை வாங்கி அதற்கு ஜில்லு என்று பெயரிட்டு வளர்த்துள்ளனர்.  வயதான தம்பதிகளுக்கு தனிமையே தெரியாத அளவிற்கு நாய் ஜில்லு, எப்போதும் அவர்களோடு விளையாடி வருகிறது. இது தவிர, கடைக்கு சென்று காய்கறி, பால் வாங்கி வருவது என உதவியாக இருப்பதாக நாயின் உரிமையாளர் சாந்தி தெரிவிக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்