வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப்புலி குட்டி : பதறியடித்து வெளியேறி வீட்டை பூட்டிய உரிமையாளர்
நீலகிரி மாவட்டத்தில், வீட்டுக்குள் சிறுத்தைப்புலி குட்டி நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், வீட்டுக்குள் சிறுத்தைப்புலி குட்டி நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பந்தலூர் தாலுகா கைவட்டா கிராமத்தில் வசிக்கும் ராயன் என்பவர், தமது வீட்டில் வித்தியாசமான சத்தம் கேட்டதை அடுத்து கட்டிலுக்கு அடியில் பார்த்துள்ளார். அப்போது சிறுத்தைப்புலி குட்டி இருந்ததை கண்ட அவர், பதறி அடித்து வீட்டைவிட்டு வெளியேறினார். தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story