கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட கும்பல் : 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டது தொடர்பாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட கும்பல் : 4 பேர் கைது
x
இடையார் தெருவை சேர்ந்தவர் முரளி. இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் இவரிடம் வாகன வேலைக்காக சேதுபதி என்பவர் மூன்று 100 ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். ஆனால் ரூபாய் நோட்டுக்களில் சந்தேகம் அடைந்த முரளி, போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சேதுபதியை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலை தொடர்ந்து கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டதாக குன்றக்குடியை சேர்ந்த சிவரஞ்சனி, சின்னையா மற்றும் விராலிமலையை சேர்ந்த கிட்டு ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்