உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
நெல்லை மாவட்டம் உவரி புனித அந்தோணியார் திருத்தல விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் உவரி புனித அந்தோணியார் திருத்தல விழா தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 17 - ம்தேதி வரை பதின்மூன்று நாட்கள் நடக்கிறது. நாள்தோறும் காலையில் திருப்பலியும் மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மறையுரை ஆகியவை நடக்கிறது.
Next Story