சாலை பாதுகாப்பு - புதிய விருதுகள் அறிவிப்பு

விபத்துக்களை தடுப்பதில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கும், காவல்துறை ஆணையரகத்திற்கும், இந்த ஆண்டு முதல் முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு - புதிய விருதுகள் அறிவிப்பு
x
* நாளை முதல் வரும் 10ஆம் தேதி வரை 30வது சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். 

* தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். 

* தமிழக அரசின் தொடர் முயற்சியால், கடந்த 2017ஆம் ஆண்டை விட, 2018ல் சாலை விபத்துக்கள் 3 சதவீதம் குறைந்துள்ளது எனவும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் 25 சதவீதம் குறைந்துள்ளது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

* சாலை பாதுகாப்பு பணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பான நடவடிக்கை எடுக்கும் 3 மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல்துறை ஆணையரகத்திற்கும் முதலமைச்சர் விருது வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

* சாலை விதிகளை முறையாக கடைபிடித்து விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்