கலாச்சாரம் பண்பாட்டை பேணிக்காக்கும் மாநிலம் தமிழகம் - இந்திரா பானர்ஜி
கலாச்சாரம் பண்பாட்டை பேணிக்காக்கும் மாநிலம் தமிழகம் என உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் சார்ந்த மின்னனு நூலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், நீதிபதி பதவி கெளரவப்பதவி அல்ல என்றார். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என கூறிய அவர், இந்திய குடிமக்களின் கடமையை கூறும் அரசியலமைப்பு சட்டத்தின் 51 ஏ பிரிவு தனக்கு மிகவும் பிடித்த பிரிவு என்றும் கூறினார். பேச்சுரிமை என்பது அடிப்படை உரிமை என்று கூறிய அவர், மற்றவர்களின் பேச்சுரிமையில் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தின் கலாச்சானம் தொன்மையானது என்று தெரிவித்த இந்திரா பானர்ஜி கிராமம் சார்ந்த கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் குறிப்பிட்டார்.
Next Story