மெரினாவில் தடையை மீறி குளிக்கும் சிறுவர்கள்

"சிறுவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை" - சென்னை காவல்துறை எச்சரிக்கை
மெரினாவில் தடையை மீறி குளிக்கும் சிறுவர்கள்
x
மெரினா கடற்கரையில் ஆபத்தான பகுதிகளில் தடையை மீறி குளிக்கும் சிறார்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மெரினாவில் குளித்த போது மாயமான 3 சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டது குறித்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்து வரும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்