ஆயுதப்படை போலீசாருக்கு சொந்தமான குடியிருப்பில் 65 பாம்புகள்...

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆயுதப்படை போலீசாருக்கு சொந்தமான குடியிருப்பில், ஏராளமான பாம்புகள், காவல்துறையினரிடம் பிடிப்பட்டன.
ஆயுதப்படை போலீசாருக்கு சொந்தமான குடியிருப்பில் 65 பாம்புகள்...
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆயுதப்படை போலீசாருக்கு சொந்தமான குடியிருப்பில், ஏராளமான பாம்புகள், காவல்துறையினரிடம் பிடிப்பட்டன. இந்த குடியிருப்பை சுற்றிலும் ஏராளமான வாழை மற்றும் பழ மரங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் ஏராளமான பாம்புகள் சுற்றி திரிந்த நிலையில், காலை முதல் பாம்புகளை வனத்துறையினர் பிடித்து வருகின்றனர். இதுவரை கொடிய விஷமுள்ள 5 நாகம், 20 கட்டுவிரியன், 40க்கும் மேற்பட்ட சாரை பாம்புகள் என 65 பாம்புகள் பிடிபட்டுள்ளன. பிடிப்பட்ட பாம்புகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டுக்குள் விடப்படும் என, காவல்துறையினர் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்