சென்னையில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன - மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை கிண்டி முதல் பெருங்களத்தூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவல்துறை சார்பில் 800 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
x
சென்னை கிண்டி முதல் பெருங்களத்தூர் வரை  18  கிலோ மீட்டர் தூரத்திற்கு காவல்துறை சார்பில் 800 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பயன்பாட்டை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.  போக்குவரத்து விதிகள் குறித்த கையேட்டை பள்ளி மாணவர்களுக்கு அவர் வழங்கினார். அப்போது பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன் இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகமும்,  பாதுகாப்பு மிக்க மாநகரமாக சென்னையும் விளங்குவதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்