ஒரே சாவியில் 20 வண்டிகள் திருட்டு - கொள்ளையனை கைது செய்த போ​லீசார்

சென்னையில் பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டர்களை மட்டும் குறி வைத்து 20 வண்டிகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஒரே சாவியில் 20 வண்டிகள் திருட்டு - கொள்ளையனை கைது செய்த போ​லீசார்
x
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்கள் திருடு போயின. இது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது சிட்லப்பாக்கத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டர்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் ஆண்கள் ஓட்டும் இருசக்கர வாகனத்தை ஓட்ட தெரியாததால் ஸ்கூட்டர்களை மட்டும் திருடியது தெரியவந்தது. ஒரே சாவியை பயன்படுத்தி 20 வண்டிகளை திருடியதும், அதனை விற்று வந்ததும் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்