கர்நாடக அரசு பேருந்து மீது கல்வீச்சு : ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயம்

வாணியம்பாடி அருகே கர்நாடகா அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக அரசு பேருந்து மீது கல்வீச்சு : ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயம்
x
வாணியம்பாடி அருகே கர்நாடகா அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி வந்த கர்நாடகா அரசு பேருந்து ஓட்டுநருக்கும்,  அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஓட்டுநருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து  பேருந்தில் இருந்தவர்கள் மீது  கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட  ஐந்து பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்