போதை மாத்திரைகளாக பயன்படுத்தப்படும் தூக்க மாத்திரைகள்

கோவையில் மருந்துகடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் இளைஞர்கள் தூக்க மாத்திரைகளை, போதை மாத்திரைகளாக பயன்படுத்தி வந்த‌து, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போதை மாத்திரைகளாக பயன்படுத்தப்படும் தூக்க மாத்திரைகள்
x
கோவையில் மருந்துகடைகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது குனியமுத்தூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள மருந்துகடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை மற்றும் மயக்க மருந்துகளை விற்பனை செய்து வந்த‌து தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், தூக்க மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்தி வந்த‌து தெரிய வந்துள்ளது. இதற்காக 32 ரூபாய் மதிப்புள்ள தூக்க மாத்திரைகளை, இளைஞர்கள், 500 ரூபாய் வரை கொடுத்து வாங்கி சென்றுள்ளனர். அங்குள்ள மருந்துகடைகளில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் அதிகமான தூக்க மாத்திரைகள் மற்றும் மயக்க மருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மருந்துகடை உரிமையாளர் சுப்பிரமணியை போலீசார் கைது செய்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்