ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்று முக்கிய ஆலோசனை...
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், தங்கள் கோரிக்கையை தளர்த்திக்கொள்வது குறித்து, முதலமைச்சரிடம் நேரில் தெரிவிக்க தயார் என குறிப்பிட்டார்.
Next Story