எழுத்தாளர் முகமது யூசுப் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த எழுத்தாளர் முகமது யூசுப், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
x
* கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த எழுத்தாளர் முகமது யூசுப், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள முகமது யூசுப்   32 மலையாள நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

* தனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் எழுதுவதை பணியாக கொண்டுள்ளதாகவும் எழுத்தாளர் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

* மேலும் தான் முறையாக மலையாளம் படிக்கவில்லை எனவும், சுயமுயற்சியால் தொடர் வாசிப்பு மூலம் மலையாளத்தை படித்ததாக எழுத்தாளர் முகமது யூசுப் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்