வீட்டின் மேற்கூரையை பிரித்த போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளிகள் உயிருடன் மீட்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீட்டின் மேற்கூரையை பிரித்த போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர்.
வீட்டின் மேற்கூரையை பிரித்த போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளிகள் உயிருடன் மீட்பு
x
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீட்டின் மேற்கூரையை பிரித்த போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர். பல்லடம் பாரதிபுரத்தைச் சேர்ந்த தனசீலன் என்பவரின் வீட்டின் மேற்கூரையை சரிசெய்யும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த லட்சுமணன், தங்கவேல் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் உயிருடன் மீட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்