ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் சிரமம் - கோயிலில் பாடம் நடத்திய பெண்கள்

திருவள்ளூர் மாவட்டம் ​கும்மிடிபூண்டியில் கோவில் வளாகத்தில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
x
திருவள்ளூர் மாவட்டம் ​கும்மிடிபூண்டியில் கோவில் வளாகத்தில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். போராட்டம் காரணமாக, கோட்டக்கரை நேதாஜி நகரில் ஊராட்சி பள்ளிக்கு ஆசிரியர்கள், வராததால், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், அரசால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பாடம் சொல்லி கொடுத்தார். ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடித்ததால், அதே பகுதியை சேர்ந்த வாசுகி, கீதப்பிரியா என்ற 2 பட்டதாரி பெண்கள், கோயில் வளாகத்தில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்