"ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்" - தமிழக அரசு எச்சரிக்கை

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கீழ் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் நாளைக்குள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
x
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கீழ் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் நாளைக்குள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. நாளை பணிக்கு வரும் ஆசிரியர்கள் எவ்வித நடவடிக்கையின்றி அவர்கள் வேலை பார்த்த பள்ளியிலேயே பணியேற்கலாம் என்றும், நாளை பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்களில் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28ந்தேதிக்கு பின் பணியில் சேரும் ஆசிரியர்கள் துறை நடவடிக்கைக்கு உட்பட்டு ஏதேனும் ஒரு காலி பணியிடத்தில் பணியாற்ற ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்