எய்ம்ஸ் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி...

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி...
x
மதுரை தோப்பூரில் சுமார் ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மண்டேலா நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க மதுரை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுனர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய மாநில அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து மண்டேலா நகர் சென்ற மோடி, மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் 750 படுக்கை வசதிகளுடன் கட்டப்படும் இந்த மருத்துவமனை பணிகளை 45 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் அதிநவீன மருத்துவ வளாகங்களையும் அவர் திறந்துவைத்தார். 



Next Story

மேலும் செய்திகள்