விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு - பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்

மதுரையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அரசு மருத்துவமனை முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு - பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்
x
கோச்சடை காளை அம்பலகார தெருவை சேர்ந்த முத்துகார்த்திக் என்ற இளைஞரை நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக, போலீசார் அழைத்து சென்றனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி விசாரணை  முடிந்து வந்த, முத்து கார்த்திக், உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் துன்புறுத்தியதால் முத்துகார்த்திக் உயிரிழந்ததாக, கூறி, அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மேலும், கோட்டாச்சியர் தலைமையில் விசாரணை நடத்தி உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 
இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, போலீசார், 150 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்