"காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்" - அமைச்சர் தங்கமணி

சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
x
2- வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாள்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் 2-ஆம் நாளான இன்று மாநாட்டில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் தங்கமணி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார். 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், 3 லட்சம் கோடி முதலீடு வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்​. 


Next Story

மேலும் செய்திகள்