பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்த விவகாரம் : கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

சென்னையில் வியாசர்பாடியில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக, பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த‌ மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்த விவகாரம் : கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது
x
சென்னையில் வியாசர்பாடியில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக, பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த‌ மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட் கிழமையன்று, நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன் அடிப்படையில், விசாரித்துவந்த எம்.கே.பி.நகர் போலீசார், 6 மாணவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் அம்பேத்கார் கலை கல்லூரி மாணவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்