வேலைநிறுத்த போராட்டத்தை தமிழக அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை - மாயவன், ஜாக்டோ- ஜியோ

அரசின் எச்சரிக்கையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
x
சென்னை எழிலக வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசைக் கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தொடக்கப்பள்ளிகளை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முன் வைத்துள்ளனர். அரசின் கெடுபிடி, எச்சரிக்கையை மீறி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்