ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்
x
திருச்சி மாநகர் பகுதியில் அதிகளவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக,  கோட்டை உதவி ஆணையர் கோடிலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேலபுலிவார்ரோடு பகுதியில் உள்ள மங்கலம்ராம் என்பவரது குடோனில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள்,  ஒரு டன் எடையுள்ள 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பான்பராக், புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் உரிமையாளர் மங்கலராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்