கிணற்றில் விழுந்த 4 வயது யானை குட்டி : 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வல்லபுரத்து ஒடை பகுதியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 4 வயது யானை குட்டி ஒன்று விழுந்தது.
கிணற்றில் விழுந்த 4 வயது யானை குட்டி : 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
x
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வல்லபுரத்து ஒடை பகுதியில் குருசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 4 வயது யானை குட்டி ஒன்று விழுந்தது. யானைகளுக்குள் ஏற்பட்ட தகராறின் போது அது கிணற்றில் விழுந்ததாக தெரியவந்தது. யானையை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு யானையை மீட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குட்டி யானை பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்