ஓமலூர் : இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய போலீசார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் போலீசார் வாலிபால் விளையாடி முன்மாரியாக திகழ்ந்துள்ளனர்.
ஓமலூர்  : இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய போலீசார்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் போலீசார் வாலிபால் விளையாடி முன்மாரியாக திகழ்ந்துள்ளனர். தீவட்டிப்பட்டி காவல் நிலைய போலீசார், தங்கள் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புகார் பெட்டி வைத்து, பிரச்சினைகளை கிராமத்திற்கே சென்று தீர்த்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக எலத்தூர் கிராமம் சென்ற காவல் ஆய்வாளர் சம்பத், உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடினர். இதனால், மகிழ்ச்சியடைந்த இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை களைய இது வழிவகுத்துள்ளதாக கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்