பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்
x
தூத்துக்குடி மாவட்டத்தில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள பொட்டலூரணி சாலையில்,  இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். சுயநினைவின்றி காணப்பட்ட அந்தப் பெண்ணை சாலையில் சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இளம் பெண்ணை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்