வெளிநாட்டு பயணத்திற்காக மாணவ-மாணவிகள் தேர்வு

அரசு சார்பில் வெளிநாட்டு பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவ- மாணவிகளுக்கு திருவண்ணாமலையில் பாராட்டு விழா நடைபெற்றது.
வெளிநாட்டு பயணத்திற்காக மாணவ-மாணவிகள் தேர்வு
x
அரசு சார்பில் வெளிநாட்டு பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவ- மாணவிகளுக்கு திருவண்ணாமலையில் பாராட்டு விழா நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை வடிவமைத்து பார்வைக்கு வைத்த 50 மாணவ - மாணவிகள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அவர்கள் 
அரசு சார்பில் பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய  நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அங்கு 10 நாட்கள் தங்கி கல்வி முறை, கலாச்சாரம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவ- மாணவிகளுக்கு திருவண்ணாமலையில் பாராட்டு மற்றும் வழியனுப்பு விழா நடைபெற்றது.  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை பாராட்டினர்.  


Next Story

மேலும் செய்திகள்