பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
x
ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருப்பூரை சேர்ந்த, ஜெனிதாமேரி, தாஸ் மற்றும் லோகேஸ்வரன் ஆகிய 3 பேரும் ஆற்றில் இன்று காலை குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்ற 3 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.  தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றில் மூழ்கியவர்களை தேடி, இறுதியில் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பங்களாபுதூர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்