மாட்டுப்பொங்கல் - கோயில்களில் சிறப்பு வழிபாடு
மாட்டுப்பொங்கல் - கோயில்களில் சிறப்பு வழிபாடு
வேலூர் மாவட்டம் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயிலில் கோமாதாவிற்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. பின்னர் நந்தி பகவானுக்கு சர்க்கரை பொங்கல் படையலிட்டப்பட்டது.
திருத்தணி முருகன் கோயிலும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து காவடிகள் ஏந்தி முருகப்பெருமானை வழிபட்டனர்.
நெல்லை மாவட்டம் நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மேலவீரராகவபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு, தை கணு தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தாமிரபரணி நதியில் சுவாமியும் அம்பாளும்பெரிய சேஷ வாகனத்தில்
எழுந்தருளினர்
Next Story