சென்னை விமான நிலையத்தில் போலியான இ- டிக்கெட் மூலம் நுழைந்த இளம்பெண் கைது

போலியான இ டிக்கெட் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நுழைந்த ஒடிசா மாநில இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் போலியான இ- டிக்கெட் மூலம் நுழைந்த இளம்பெண் கைது
x
போலியான இ டிக்கெட் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நுழைந்த ஒடிசா மாநில இளம்பெண் உட்பட 3 பேரை  போலீசார் கைது செய்தனர். சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இபான்மயி என்ற பெண், தன் ஆண் நண்பரை விமானத்தில் ஏற்றி விடுவதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது போலியான இ டிக்கெட் மூலம் அவர் விமான நிலையத்திற்குள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்