விபத்து ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் : பொதுமக்கள் சிறைபிடித்து மறியல்
திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளரை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளரை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் - அவிநாசி சாலையில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கு முன்பு நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று ரசிகர் மீது மோதியது. இதில் காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காரை ஓட்டிவந்த அனுப்பர்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் தனசேகரை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி உதவி ஆய்வாளரை மீட்டுச் சென்றனர்.
--
Next Story